Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிச்சான்றிதழை பசுவின் காலடியில் வைத்து வணங்கிய வீரர்

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (19:32 IST)
தமிழகத்தில் பசுமாடு மற்றும் காளை மாடுகளை செல்ல பிராணிகளாக மட்டுமின்றி தங்களுடைய குழந்தைகளில் ஒன்றாக வளர்க்கும் வழக்கம் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதேபோல் மல்யுத்த வீரர் ஒருவர் தான் மல்யுத்த போட்டியில் பெற்ற வெற்றி சான்றிதழை தான் ஆசை ஆசையாய் வளர்த்த பசுவின் காலடியில் வைத்து வணங்கியுள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் ஒருவர் தான் வாங்கிய வெற்றி சான்றிதழை பசுவின் காலடியில் வைத்து, அந்த பசுவை கட்டிப்பிடித்து பாசமுடன் அணைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன்னுடைய உடல் இந்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு அந்த பசு கொடுத்த பாலை குடித்ததால்தான் என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கால்நடைகளை விலங்காக பார்க்காமல் தனக்கு வெற்றியை தந்த குருவாக பார்க்கும் அந்த வீரரின் மனப்பான்மையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments