Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா நிபுணர் பி.கே.எஸ்.அய்யங்கார் காலமானார்

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:46 IST)
இந்திய யோகா கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய, பத்ம விபூஷன் விருது பெற்ற யோகா நிபுணர் பி.கே.எஸ்.அய்யங்கார், புனேவில் இன்று (20.08.2014) அதிகாலை காலமானார்.
 
யோகா கலை தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், பயிற்சி நெறிகளை எழுதி வெளியிட்டுள்ள பி.கே.எஸ்.அய்யங்காருக்கு உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் உள்ளனர். 
 
இத்துறையில் சிறப்பாகத் தொண்டாற்றியமைக்காக இந்திய மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை அவர் பெற்றிருந்தார். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வாழ்ந்து வந்த அவர், தனது 96ஆவது வயதில் இன்று புனேவில் உயிரிழந்தார்.
 
அண்மைக் காலமாக சுவாசக் கோளாறு, மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி, இயற்கை எய்தினார்.
 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments