Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: சிவசேனா தலைவர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (22:22 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 280 இடங்கள் கிடைத்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

இன்று ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடைபெற்ற சிவசேனா பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மேலும் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும் என்ற வாக்குறுதி கொடுத்ததால்தான் பாஜகவுக்கு கடந்த தேர்தலில் 280 தொகுதிகள் கிடைத்தது. ஆனால் ராமர் கோவில் கட்டுவதாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், 2019ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியில் இருந்துதான் வர வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும்போது மக்களிடம் எழுச்சியை பார்ப்பதால் இதை உறுதியாகா சொல்கின்றேன்' என்று உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments