Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: சிவசேனா தலைவர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (22:22 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 280 இடங்கள் கிடைத்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

இன்று ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடைபெற்ற சிவசேனா பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மேலும் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும் என்ற வாக்குறுதி கொடுத்ததால்தான் பாஜகவுக்கு கடந்த தேர்தலில் 280 தொகுதிகள் கிடைத்தது. ஆனால் ராமர் கோவில் கட்டுவதாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், 2019ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியில் இருந்துதான் வர வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும்போது மக்களிடம் எழுச்சியை பார்ப்பதால் இதை உறுதியாகா சொல்கின்றேன்' என்று உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு சென்றீர்களா? கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுங்கள்.. வழக்கை உடனே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படையுங்கள்: நீதிமன்றம் உத்தரவு..!

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments