Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை போட்டு பாப்போம்! – ராஜஸ்தானில் பாஜக முயற்சி!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூட உள்ள நிலையில் எதிர்கட்சியான பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலர் இடையே ஏற்பட்ட மோதலால் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறுவதாக இருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக இருதரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments