Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

Mahendran
வியாழன், 10 ஏப்ரல் 2025 (16:42 IST)
நிதீஷ் குமாருக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர்,  தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிதீஷ் குமார் தலைமையில் உள்ள கட்சி தான் முக்கிய ஆதரவாக இருந்தது என்பதும், அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சவுபே என்பவர் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் பங்களிப்பு மிகவும் பெரியது. கூட்டணியில் ஒரு நங்கூரமாக அவர் செயல்பட்டு, பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தி வருகிறார்," என தெரிவித்தார்.

மேலும், "என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால், நிதீஷ் குமார் துணை பிரதமராக வேண்டும். பாபு ஜாக் விஜயன் ராம் அவர்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் இன்னொரு துணை பிரதமரை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை," என்றும் அவர் கூறினார்.

பாஜகவில் உள்ள தலைவர்களில் யாரும் இதுவரை 'துணை பிரதமர்' பற்றிய பேச்சை எடுக்காத நிலையில், இவரது ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments