Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் 65 பேர்: ஆட்சி அமைக்க தயக்கம் காட்டும் பாஜக

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (19:26 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் 65 பேர் அமைச்சர் பதவி கேட்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஆட்சி அமைக்க பாஜக காட்டுவதாக கூறப்படுகிறது 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் குமாரசாமி தலைமையில் ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆகிய பின்னரும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் உள்ளது. இதற்கு பின்னணி காரணமாக பாஜக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை இன்னும் சபாநாயகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பாஜக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும். எனவே சபாநாயகர் முடிவு தெரியும் வரை ஆட்சி அமைக்க உரிமை கோர காத்திருக்கலாம் என்பது பாஜகவின் யோசனையாக உள்ளது. ஒருவேளை சபாநாயகர் முடிவு எடுக்க தாமதம் ஆனால் சுப்ரீம் கோர்ட்டை அணுகவும் பாஜக திட்டமிட்டுள்ளது 
 
மேலும் பாஜகவில் உள்ள 50 எம்எல்ஏக்களும், ராஜினாமா செய்த 15 எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி கேட்பதால் மொத்தம் 65 பேர் அமைச்சர் பதவிக்காக காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சரையும் சேர்த்து மொத்தம் 34 பேர் மட்டுமே அமைச்சர் ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஆட்சி அமைத்து முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றால், 6 பேர் துணை முதல்வர் முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதனால் அம்மாநிலத்தில் பெரும் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments