Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா நாயுடு: பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர்!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா நாயுடு: பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (10:08 IST)
பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று காலை 11 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 
 
துணை குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. துணை குடியரசுத்தலைவரையும் எம்பிக்கள், எம்எல்ஏக்களே தேர்ந்தெடுப்பார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தியை துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்த நிலையில் பாஜக யாரை அறிவிக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
 
இந்நிலையில் பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து அவர் தற்போது உள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று காலை 11 மணியளவில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments