Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி: மோடி வலையில் விழுவாரா ஜெகன்?

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (12:12 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தனது பக்கம் இழுக்க அவரின் கட்சிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி மபெரும் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பாஜகவிற்கு ஆதரவு தருமாறு கேட்கப்பட்டுள்ளதாம். 
 
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரதிநிதியாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனை வி்ஜயவாடாவில் நேற்று சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவி வழங்குவதற்கு பாஜக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது போலும். ஆனால், ஜெகன் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லையாம். 
 
ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதால் ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments