Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி”.. ஆம் ஆத்மியை குற்றம் சாட்டும் பாஜக

Arun Prasath
திங்கள், 20 ஜனவரி 2020 (11:24 IST)
நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை ஆம் ஆத்மி அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாக டெல்லி மாநில பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, “இரு ஆண்டுகளாக குற்றவாளிகளுக்கான தண்டனையை அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஆம் ஆத்மி அரசு மறைத்துவிட்டது. நீதித்துறை நடைமுறைகளை நிறுத்திய கெஜ்ரிவால் அரசு, நிர்பயா குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க காலத் தாமதம் செய்கிறது என எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால், “நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை அளிப்பதே எங்களின் நோக்கமும். இந்த வழக்கில் நாங்கள் எந்த கால தாமதமும் செய்யவில்லை” என பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்