Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டுப்பாலில் தங்கம் உள்ளது – பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு !

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (09:50 IST)
மாட்டுப்பாலில் தங்கம் கலந்திருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாஜக தலைவர்கள் பசுக்களைக் காப்பதே தங்கள் லட்சியம் என சொல்லி வருகின்றனர். அதற்காக பசுவின் சிறுநீர் கேன்ஸரைக் குணப்படுத்தும் எனவும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இவையனைத்தும் இணையதளங்களில் கண்டனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய திலிப் கோஷ் ‘ இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்துள்ளது. அதனால்தான் அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. அந்த பால் ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து. பாலை மட்டுமே குடித்து ஒருவர் உயிர் வாழமுடியும். வேறு உணவு எதுவும் தேவையில்லை.’ எனப் பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments