Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக் - சீனா ஏவி விட்ட விஷ வாயு: பேஷாய் பேசும் பாஜக மூத்த தலை!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (11:36 IST)
டெல்லி காற்று மாசுக்கு காரணம் பாகிஸ்தான் அல்லது சீனா விட்ட விஷ வாயுவாக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவரான வினீத் அகர்வால் ஷர்தா, டெல்லி காற்று மாசு குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பதால்தான் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கூறும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கண்டிக்கிறேன். 
 
இந்தியாவில் காற்றை மாசுபடுத்த அண்டை நாடுகளான பாகிஸ்தான் அல்லது சீனா விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம். பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. 
இந்த விரக்தியில் பாகிஸ்தான் விஷ வாவுவை இந்தியாவில் வெளியிட்டு உள்ளதா என விசாரிக்க வேண்டும். ஆனால், யாரும் இது குறித்து கவலை பட வேண்டாம்.  கிருஷ்ணராக இருந்து பிரதமர் மோடியும், அர்ஜுனனாக இருந்து அமித் ஷாவும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என  பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments