Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு 2 பேர் பலி

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு 2 பேர் பலி
, செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (11:54 IST)
மேற்குவங்க மாநிலம் பிர்பம் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் இஸ்மாயில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாயினர், 6 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்து கட்டமாக, 6 மக்களவை தொகுதிகளுக்கு 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிர்பம் தொகுதி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது, இதில் 2 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
குண்டுவெடிப்பு நடந்த பிர்பம் பாராளுமன்ற தொகுதியில் மூன்றாம் கட்டமாக வருகிற 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை சீர்குலைப்பதற்காக வைக்கப்பட்ட குண்டுடாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
குண்டுவெடிப்பை தொடர்ந்து, பிர்பம் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது பம்தேவ்பூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளும், ரகுநாத்கஞ்ச் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குண்டுகள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil