Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்: அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (17:07 IST)
பீகார் மாநிலத்தில் தங்கள் பள்ளிக்கு சரியான வசதி செய்து தராத கல்வி அதிகாரிகளின் காரை மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் மஹ்னார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் போதிய வசதிகள் இல்லை என்று மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் கல்வி அதிகாரிகள் எடுக்கவில்லை. 
 
இந்த நிலையில் அரசு பள்ளியை பார்வையிட கல்வித்துறை அதிகாரிகள் காரில் வந்த நிலையில் ஆக்கிரமடைந்த மாணவிகள் அந்த காரை அடித்து நொறுக்கினர். பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஆத்திரத்தில் மாணவிகள் கல்வி அதிகாரிகளின் காரை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments