Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் மகனுக்குக் ரூ.4000 அபராதம்: போக்குவரத்து காவல்துறை அதிரடி..!

Siva
ஞாயிறு, 16 மார்ச் 2025 (16:01 IST)
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு போக்குவரத்து காவல்துறை 4000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், இவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், நேற்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஹோலி கொண்டாடிய பின்னர், இருசக்கர வாகனத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததை அடுத்து, போக்குவரத்து காவல்துறை அவரை தடுத்து நிறுத்தி 4000 ரூபாய் அபராதம் விதித்தது.
 
மேலும், அவர் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் இன்சூரன்ஸ் மற்றும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் காலாவதி ஆகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, போக்குவரத்து காவல்துறை அதிகாரி அவருக்கு அபராதம் விதித்து, இது போன்ற வாகனத்தை இயக்கக்கூடாது என்றும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

இதுதான் ரோடு போட்ட லட்சணமா? பல்லிளித்த NH-66 சாலையின் முக்கிய பகுதி.. NHAI அதிரடி நடவடிக்கை..!

டிரம்ப் தான் அமெரிக்க அதிபர், ஆனால் அவர் போட்ட சட்டை நெதன்யாகுடையது: சிவசேனா கிண்டல்..!

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments