Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்திற்கு சென்ற வேட்பாளர் சுட்டுக் கொலை! – பீகார் அரசியலில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (09:18 IST)
பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பீகாரின் ஷிகோர் மாவட்டத்தின் ஹத்சார் மாவட்டத்தில் ஜனதாதள ராஷ்டிரவாடி கட்சி வேட்பாளர் நாராயண் சிங் என்பவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரது தொண்டர் கூட்டத்தில் கலந்து வந்த சில ஆசாமிகள் திடீரென துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட தொடங்கினார்கள். இதனால் அவர் குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் பீகாரில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments