Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க வேண்டும்: முதல்வர் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (12:51 IST)
மோடி அரசை எதிர்த்து பேசினால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என பிபிசி சோதனை குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். 
 
மோடி அரசு என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் மோடி அரசுக்கு எதிராக யாராவது பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது பிபிசி சோதனை மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மக்கள் இறுதியில் மோடி அரசு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்க விரும்பினால் இந்தியாவை அழிக்க நினைக்கிறார்கள் என்று தான் அர்த்தம் என்றும் நம் மகாத்மா காந்தியின் பாதையில் செல்வோம் என்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கடைப்பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments