Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு நிபா, பீகாருக்கு மூளைக்காய்ச்சல் – 2 நாட்களில் 36 குழந்தைகள் மரணம்

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (13:41 IST)
பீகார் மாநிலத்தில் வேகமாக பரவிவரும் மூளைக்காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பீஹார் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வடக்கு பீகார் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதித்தபோது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் இந்த குறைப்பாடானது பீகாரில் உள்ள அதிகமான குழந்தைகளுக்கு உள்ளது. இந்த பாதிப்பினால் கடந்த 48 மணி நேரத்தில் 36க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேராளாவில் நிபா வைரஸ் பரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை போல பீகாரில் இந்த மூளைகாய்ச்சல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பீகார் அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments