Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் சட்டமன்றத் தேர்தல்: நிதிஷ் குமார் -லாலு கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2015 (05:46 IST)
பீகார் சட்டமன்றத் தேர்தலில்  நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
பீகார் சட்ட மன்றத் தேர்தலுக்கு ஐந்து கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
 
இதில், நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
 
இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றிகள் இதோ:-
 
ராஷ்டீரிய ஜனதா தளம் - 80
ஐக்கிய ஜனதா தளம் - 71
காங்கிரஸ் - 27
பாஜக - 53
ராஷ்டீரிய லோக் சமதா கட்சி - 2
கம்யூனிஸ்ட் (மா.லெ) விடுதலைக் கட்சி - 3
லோக் ஜனதா சக்தி கட்சி - 2
இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா - 1
சுயேட்சை வேட்பாளர்கள் - 4.
 
இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில், செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் தொடர்ந்து செயல்படுவார் என்று அறிவித்தார். 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments