Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மயமாகும் BHEL? மோடி அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (15:21 IST)
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 
 
விலைவாசியை மனதில் கொண்டு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 6,00வழங்க வழி வேண்டும், அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. 
 
இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க தொழில்துறை அமைச்சர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் தரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் 50 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் விற்கப்பட்டால் பெல் தனியார் மயமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments