Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8மணி நேரம் பிணவறையில் உயிருடன்........ பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (16:09 IST)
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெல் ஊழியர் பிணவறையில் 8 மணி நேரம் உயிருடன் இருந்து இறந்தது பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 
ஹரித்துவாரின் பெல் மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்து விட்டதாக இரவு 11.30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் காலை 8 மணி அளவில் உயிரிழந்தது தெரியவந்தது. இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின் சுமார் 8 மணி நேரம் பிணவறையில் உயிருடன் இருந்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவ அதிகாரி அசோக் கெய்ரோலா தலைமையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments