Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:32 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டிருப்பதை அடுத்து பெட்ரோல் டீசல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் பாரத் பந்திற்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
 
அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் மற்றும் ம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆகிய அமைப்புகளும் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்த பந்த் நடத்தப்படுவதாகவும், சரக்கு மற்றும் சேவை வரியை விதிகளை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் பாரத் பந்த்தில் கலந்துகொண்டிருந்த வணிகர்களின் அமைப்புகள் தெரிவித்துள்ளன 
 
மேலும் வெளிநாட்டு இகாமர்ஸ் நிறுவனங்கள் அத்துமீறலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்க்கு பெரும்பாலான மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments