Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மோடி ஒரு கொலைக்காரர்' - மீண்டும் சர்ச்சையில் பென்னி பிரசாத் வர்மா

'மோடி ஒரு கொலைக்காரர்' - மீண்டும் சர்ச்சையில் பென்னி பிரசாத் வர்மா
, திங்கள், 21 ஏப்ரல் 2014 (11:24 IST)
லக்னோவில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் பென்னி பிரசாத் வர்மா, பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'கொலைக்காரர்' என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
இது குறித்து அவர் பேசிகையில், மோடி அவருடைய 18 வது வயதில் ஒரு கொலையை செய்துவிட்டு   அவருடைய வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் மீது குஜராத் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்தன. ஆனால், அவர் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஆனதும்  அவ்வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்ததாக கூறினார். 
 
பென்னி பிரசாத் வர்மாவின் இந்த கருத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியில்  செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் பென்னி பிரசாத்  மீண்டும் மீண்டும் இத்தகைய குற்றங்களை செய்து வருவதாக தெரிவித்தார்.
 
மேலும், பென்னியின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது எனக் குறிப்பிட்ட அவர் பென்னி தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil