Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா வந்தார் ஒபாமா: டெல்லியில் மோடி நேரில் வரவேற்பு

இந்தியா வந்தார் ஒபாமா: டெல்லியில் மோடி நேரில் வரவேற்பு
, ஞாயிறு, 25 ஜனவரி 2015 (13:05 IST)
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணியளவில் இந்தியா வந்தார். டெல்லியில் அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக அவரும் அவரது மனைவி மிஷேலும் மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படை தளத்தில் இருந்து 'ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் நேற்று இந்தியா புறப்பட்டனர். அவர்களுடன் மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் புறப்பட்டனர்.
 
டெல்லியில் இன்று காலை 9.45 மணியளவில் டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து வரவேற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil