Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நிபா’ வைரஸ் பரவ வவ்வால்கள் காரணம் அல்ல - ஆய்வின் தகவல்

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (10:40 IST)
நிபா வைரஸ் பரவ வவ்வால்கள் காரணம் அல்ல என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது.
 
இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
‘நிபா’ வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுவதால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வவ்வால்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை மத்தியபிரதேச மாநிலம் போபால் மற்றும் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வின் முடிவில்  ‘நிபா’ வைரஸ் பரவலுக்கு காரணம் வவ்வால்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது. நிபா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து கண்டறிய மத்திய சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments