Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் ஸ்ரைக்; 2 நாள் லீவ்: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது?

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (11:02 IST)
திட்டமிட்டபடி வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 
சமீப காலமாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. அந்த அவ்கையில் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குகிறது. இதற்கான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
 
இதனால் திட்டமிட்டபடி வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
இரண்டு நாட்கள் வேலை நிறுத்ததிற்கு பின்னர் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments