Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச்.31 வரை வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (12:06 IST)
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் திரையரங்குகள் மால்கள் உள்பட பல முக்கியமானவை அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடியாக மார்ச் 31 வரை தினமும் 4 மணி நேரத்துக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மார்ச் 31 வரை இந்தியா முழுவதும் வங்கிகள் அனைத்துமே 4 மணி நேரத்தில் மட்டுமே செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய வங்கிகள் சங்கம் உறுதி செய்துள்ளது,
 
இதன்படி காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும் சில வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் 3 மணி வரை செயல்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் வங்கியில் இருந்து பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை பரிமாற்றம், அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடக்கும் என்றும் நகைக்கடைகள், வீட்டு கடன் ஆகியவை எந்த பணிகளும் வரும் மார்ச் 31ம் தேதி வரை இல்லை என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments