Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்: வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:29 IST)
வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வங்கியின் வேலை நேரம் சமீபத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மாற்றப்பட்டது. ஆனால் சில நாட்களில் வங்கிகள் முழுமையான நேரங்களில் செயல்படும் என்றும் சமூக விலகலை கடைபிடித்து மாஸ்க் அணிந்து வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் வங்கிகள் மாலை 4 மணி வர திறந்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருப்பதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதற்கட்ட ஊரடங்கின்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்ததால் மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கில் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. எனவே வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பகல் 1 மணிக்கு முன்னதாகவே தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்கின்றனர். எனவே இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments