Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

Siva
சனி, 22 மார்ச் 2025 (17:56 IST)
வங்கிக் கிளைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக மாற்ற வேண்டும், வங்கிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
 
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.) மற்றும் தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்த சந்திப்பின்போது, தொழிலாளர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்ததாக யு.எப்.பி.யு. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments