Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? ஒரு ஆட்டோக்காரர் சந்தித்த வேதனை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (05:30 IST)
கடந்த 28ஆம் தேதி பெங்களூரில் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோவில் பெங்களூரில் உள்ள முக்கிய தெருக்களில் தமிழில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை செய்தார்

இதனை பார்த்த கன்னட வெறியர்கள் சிலர் அந்த ஆட்டோக்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவின் சாவியை பிடுங்கி வைத்து கொண்டு 'தமிழில் என்ன பேசுகிறாய்? கன்னடத்தில் பேசு என்று அடாவடி செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கி அறிவிப்புக்கு உரிய அனுமதி இருக்கின்றதா? என்று சோதனை செய்தார். அனுமதிக்கடிதம் சரியாக இருக்கவே, ஆட்டோக்காரரிடம் பிரச்சனை செய்த கன்னடர்களை காவல்துறை அதிகாரி அப்புறப்படுத்தினார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவு செய்யும் பலர், பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments