Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

பெங்களூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (08:47 IST)
பெங்களூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் 3 பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பெங்களூர் ஹெப்பாலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆகஸ்ட்டு 29 ஆம் தேதி கடத்திச் சென்ற மர்மநபர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் ஹெப்பால் காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய முனிராஜ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரரில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil