Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்-அப்பிற்கு வருகிறது தடை - மத்திய அரசு ஆலோசனை

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (11:41 IST)
வாட்ஸ்-அப்பில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

 
தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதனால், சமூக வலைத்தளங்களான டிவிட்டர், முகநூல், வாட்ஸ்-ஆப் ஆகியவற்றை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.  மேலும், அதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிகளை பலரும் பயன்படுத்துகின்றனர்.
 
கடந்த 2016ம் ஆண்டு இந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடதினர். அப்போது, தங்களின் ஓவ்வொரு அசைவையும் தங்களின் கூட்டாளிகளுக்கு வாட்ஸ்-அப் மூலமே அவர்கள் பகிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏனெனில் வாட்ஸ்-அப் கால் மற்றும் வீடியோக்களை சேகரிக்கவும் முடியாது, அதை ஒட்டுக்  கேட்கவும் முடியாது. எனவே, தீவிரவாதிகள் வாட்ஸ்-அப்பை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
 
எனவே, வாட்ஸ் அப் கால் மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. முதல் கட்டமாக இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தடை கொண்டு வரப்படுகிறது.  முதலில் காஷ்மீரில் இந்த தடை அமுலுக்கு வரும் எனத்தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments