Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பாகுபலி’ ஸ்டைலில் ஆந்திர தலைநகரம் - ராஜமௌலிக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:06 IST)
பாகுபலி பட ஸ்டைலில் ஆந்திராவின் புதிய தலைநகரை வடிவமைக்குமாறு டைரக்டர் ராஜமௌலியிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை பல கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக அமைக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். பழமையும், புதுமையும் கலந்து அமராவதி நகரை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட அரண்மனை, கோபுரங்கள், மாடங்கள், கட்டிட வடிவமைப்புக்கள் சந்திரபாபு நாயுடுவை மிகவும் கவர்ந்துள்ளதாம்.

இதனால் அமராவதி நகருக்கான மாதிரி வடிவத்தை பாகுபலி ஸ்டைலில் உருவாக்கித் தருமாறு பாகுபலி பட டைரக்டர் ராஜமௌலியிடம், சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார்.

இதை ஏற்றுக் கொண்ட டைரக்டர் ராஜமவுலி, ஏப்ரல் மாதம் வரை ‘பாகுபலி-2’ பட வேலைகள் இருப்பதால், அதன்பிறகு புதிய நகரத்துக்கான வடிவமைப்பை தயாரித்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

தமிழகத்தில் மே 30 வரை கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 சதய விழாவில்- அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை!

பல்லாங்குழி சாலைகளால் பதறும் வாகன ஓட்டிகள்

யூட்யூபர் இர்ஃபான், உதயநிதியோட ப்ரெண்டு.. அதுனால கேஸ் இல்ல! என் மேல 5 கேஸ் இருக்கு! – அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமான செயல்பாடுகளை விரைவுபடுத்த கிராம மக்கள் மனு!

அடுத்த கட்டுரையில்
Show comments