Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 22 ஜூன் 2024 (15:11 IST)
ஒரு வயது குழந்தை தனக்கு பிறந்ததா என சந்தேகம் அடைந்த தந்தை அந்த குழந்தையை கொலை செய்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் என்பவர் தனது மனைவியை அடிக்கடி சந்தேகம் கொண்டதாக தெரிகிறது. அவருக்கு வேறு ஒரு ஆணுக்கு சம்பந்தம் இருப்பதாக அடிக்கடி கூறி சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தனக்கு பிறந்த குழந்தையை கூட அவர் சந்தேகம் அடைந்ததாகவும் அந்த குழந்தைக்கு உண்மையிலேயே அப்பா நான் தானா என அடிக்கடி மனைவியிடம் கேட்டு சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திடீரென நேற்று குழந்தை மயக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் மருத்துவமனையில் சென்று காட்டிய போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சுஜித்தை கைது செய்து விசாரணை செய்தனர்.
 
அப்போது தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என்பதால் அந்த குழந்தையை தான் கொலை செய்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments