Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

55 கோடி ரூபாய் செலவில் பாகுபாலி செட்டில் நடந்த கேரளா தொழிலதிபரின் மகளின் திருமணம்

55 கோடி ரூபாய் செலவில் பாகுபாலி செட்டில் நடந்த கேரளா தொழிலதிபரின் மகளின் திருமணம்
, வியாழன், 26 நவம்பர் 2015 (21:08 IST)
கேரளாவில் பிரபல தொழிலதிபரின் மகளின் திருமணத்திற்கு 55 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தித்தில் விருந்தினர்களை வரவேற்க 23  கோடி ரூபாய்க்கு பாகுபாலி திரைப்படத்தின் செட் அமைக்கப்பட்டிருந்தது.


 
 
பஹ்ரனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்.ஆர். குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை கேரளாவை சேர்ந்தவர், இவருக்கு வளைகுடா நாடுகளில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
 
இந்நிலையில் ரவி பிள்ளையின் மகள் ஆர்த்திக்கும் கொச்சியை சேர்ந்த ஆதித்யா விஷ்ணுவுக்கும் கொல்லத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்ந திருமணத்தில் கொல்லத்தில் உள்ள அஷ்ராம் மைதானத்தில், 8 ஏக்கரில் 23 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக 55 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது
 
இதனை 'பாகுபலி' பட புகழ் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் அமைத்துள்ளார். சுமார் 30,000 விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இந்த திருமணத்தில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil