Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது மண்டல பூஜை.. அய்யப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது..!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (18:00 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்ததை அடுத்து நடை சாத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகை தந்தனர் என்பதும்  தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மண்டல பூஜை முடிந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இதனை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் மகர விளக்கு தரிசனம் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
மகரஜோதியை பார்க்கவும் கட்டுக்கடகாமல் கூட்டம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments