Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

Mahendran
செவ்வாய், 4 மார்ச் 2025 (10:05 IST)
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலையில் கோவில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அயோத்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில், இந்த கோவில் தினசரி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் காலை நேரத்தில் அதிகமாக இருப்பதால், தரிசன நேரம் காலை 6:00 மணிக்கே மாற்றப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6 மணிக்கு நடை திறந்தவுடன், 6:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 11:50 மணிக்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதன் பின் 12 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பின்னர், பகல் 1:00 மணி முதல் மாலை 6:50 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மாலை 7 மணிக்கு சந்தியா ஆரத்தி வழிபாடு நடந்த பிறகு, இரவு 9:45 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதனை கணக்கில் கொண்டு, இனி காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தி கோவிலுக்குள் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments