அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் மாற்றம்: குளிர்காலத்தையொட்டி புதிய அட்டவணை அமல்!

Mahendran
சனி, 25 அக்டோபர் 2025 (13:50 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், குளிர்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து, பக்தர்களுக்கான தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை அக்டோபர் 23ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
 
தரிசன நேரம் தொடக்கம்: பக்தர்கள் காலை 6.20 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். (முன்பு காலை 6.00 மணி)
 
தரிசனம் நேரம் நிறைவு: இரவு 8.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யலாம். (முன்பு இரவு 9.00 மணி வரை)
 
நடை சாத்தப்படும் நேரம்: மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோயில் நடை மூடப்பட்டிருக்கும். அதன் பின்னர் மீண்டும் தரிசனத்திற்காக திறக்கப்படும்.
 
ஆரத்தி நேரம் மாற்றம்:
 
தரிசன நேரத்தை போலவே, மூன்று முக்கிய ஆரத்திகளின் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன:
 
மங்கள ஆரத்தி: அதிகாலை 4:30 மணி.
 
சிருங்கர் ஆரத்தி: காலை 6:30 மணி.
 
சயன ஆரத்தி: இரவு 9:30 மணி.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments