Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரியானா காங்கிரஸ் தலைவர் அவ்தார் சிங் பதானா, கட்சியில் இருந்து விலகல்

ஹரியானா காங்கிரஸ் தலைவர் அவ்தார் சிங் பதானா, கட்சியில் இருந்து விலகல்
, புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:08 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அவ்தார் சிங் பதானா, அக்கட்சியில் இருந்து விலகி, இந்தியன் தேசிய லோக் தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஹரியானா முதலமைச்சராக இருக்கும் பூபிந்தர் சிங் ஹுடா மீது பல்வேறு குற்றச்சாற்றுகள் ஆதாரத்துடன் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோனியா காந்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.
 
நாங்கள் சோனியா காந்திக்கு கடிதம் மூலம் எல்லா ஆதாரங்களையும் கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டதாக எங்களிடம் கூறினார். ஆனால் அவர் மீது சோனியா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
காங்கிரஸ் தலைவர்களை மிரட்டுவதாகவும், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவுடன் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரத்திலும் ஹூடா மீது அவ்தார் குற்றம்சாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil