Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்; மத்திய அரசு வேண்டுகோள்

Arun Prasath
சனி, 22 பிப்ரவரி 2020 (19:10 IST)
கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் எதிரொலிக்கும் நிலையில், சிங்கப்பூருக்கான தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் சீனாவில் மட்டுமே 2,345 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, “கொரோனா வைரஸ் எதிரொலி இருப்பதால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் ” என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments