Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரு - பெங்களூரு விரைவுச் சாலையில் டூவீலர், ஆட்டோ செல்ல தடை: நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (08:05 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திறக்கப்பட்ட மைசூர் பெங்களூரு அதிவிரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
மைசூரில் இருந்து பெங்களூருக்கு அதிவிரைவில் செல்வதற்கு வசதியாக புதிய சாலை சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
தடை செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாற்று சாலை இருப்பதாகவும் அந்த சாலைகளை மட்டுமே இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தடையை மீறி பெங்களூர் மைசூர் அதிவிரைவு சாலையில் இருசக்க வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments