Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கடனை திரும்ப செலுத்தாத முடியாத நிலை.. கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த ஆடிட்டர்..

Siva
புதன், 17 ஜூலை 2024 (15:27 IST)
ஆடிட்டர் தனது கள்ளக்காதலிக்கு வங்கியில் இருந்து கடன் வாங்கி தந்ததாகவும் அந்த கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டதால் கள்ளக்காதலி வீட்டுக்கே சென்று தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவருக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு ஒரு கள்ளக்காதலியும் இருப்பதாக தெரிகிறது. அவர் அவ்வப்போது கள்ளக்காதலியை சந்தித்து வந்த நிலையில் அவருக்கு வங்கிகளில் இருந்து கடன் வாங்கியும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வாங்கிய கடனை கள்ளக்காதலி ஒழுங்காக திரும்ப செலுத்தாததால் ஷாஜியை வங்கி அதிகாரிகள் நெருக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கள்ளக்காதலின் வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

அந்த வீட்டில் அவரது கள்ளக்காதலில் உள்பட யாரும் இல்லை என்றும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்காதலிக்கு வங்கி கடன் வாங்கி கொடுத்து அதை திருப்பி செலுத்த முடியாததால் ஆடிட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments