Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 3 முறை விலை உயர்ந்தும் அட்சய திருதியை நாளில் ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை!

Siva
சனி, 11 மே 2024 (07:49 IST)
நேற்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் ஏராளமான தங்கம் விற்பனையாகும் என்றும் அன்றைய தினம் காலை 5 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்பட்டு விடும் என்றும் கூட்டம் குவிந்து வரும் என்பதும் தெரிந்தது.

நேற்று காலை ஆறு மணிக்கே தங்கம் விலை உயர்ந்த நிலையில் அதன் பின்னர் பத்து மணிக்கு மீண்டும் உயர்ந்தது என்பதும் மதியத்தில் மீண்டும் ஒருமுறை உயர்ந்து மொத்தம் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த போதிலும் தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதும் நேற்று தங்கம் வாங்கினால் வீட்டில் விசேஷமாக இருக்கும் என்ற ஐதீகம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையை செய்யப்பட்டுள்ளதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு சவரன் தங்கம் ரூபாய் 54 ஆயிரத்து 160 என்று விற்பனையான போதும் மக்கள் தங்க நகை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விவகாரம்.!ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு.! சிபிஐ விசாரணை கோரி மனு.!

தமிழகத்தில் ஜூலை 4 வரை மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அலெர்ட்..!!

வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ்.. திடீரென கழண்ட எஞ்சின்.. பயணிகள் மத்தியில் அதிர்ச்சி..!

ஒரு மாத பச்சிளங்குழந்தை மர்ம மரணம்.. நாய் கடித்ததா? கொலையா? போலீசார் தீவிர விசாரணை..!

நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..! பாஜக வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments