Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (15:17 IST)
அசாம் மாநில கிராமப் புறங்களில் வறுமையில் இருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்யப்படுகிறது.

 
அசாமில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் அதிகளவில் இந்த ஆபரேசன் செய்து கொள்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு ஆள்பிடிக்க சமூக நல ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு அரசு ரூ.2ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.
 
மேலும் ஆள்பிடித்து தருபவர்களுக்கு ரூ.200 வீதம் வழங்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் கிராமப் புறங்களில் வறுமை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர்களை பண ஆசைக்காட்டி குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு சமூக ஆர்வலர்கள் அழைத்து செல்கின்றனர்.
 
இதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அசாம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தங்களுக்கு மீண்டும் மறுசீரமைப்பு ஆபரேசன் செய்து குழந்தை பெற வழிவகை செய்யவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments