Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காலில் விழுந்தே ஆகனும்’ அரசு அதிகாரியை மிரட்டிய எம்.ஏல்.ஏ: வைரல் வீடியோ!!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (14:35 IST)
அசாம் மாநில பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ அரசுப் பொறியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அசாம் மாவட்டம் நாகோன் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ திம்பேஸ்வர் தாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது காரை அலுவலகத்தின் பாதை நடுவே நிறுத்தி வைத்தார். 
 
அதே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக உள்ளார் ஜெயந்தா தாஸ். இவர் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த எம்.எல்.ஏ.வின் காரை அங்கிருந்து அகற்றி ஓரமாக நிறுத்தியுள்ளார்.
 
இதை அறிந்த எம்.எல்.ஏ கொதிப்படைந்து, எனது காரை எப்படி நீ அகற்றலாம்? என தகராறு செய்து, தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி அரசு அதிகாரி ஜெயந்தா தாஸை மிரட்டினார். 
 
எம்.எல்.ஏ.வின் மிரட்டலால், ஜெயந்தா தாஸ் முதலில் தயங்கினாலும் வேறு வழியின்றி திம்பேஸ்வர் தாஸ் காலில் இரண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
இந்த காட்சிகள் அந்த அலுவலகத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments