Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

Webdunia
புதன், 24 டிசம்பர் 2014 (13:54 IST)
பிரதமர் மோடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "சோனித்பூர் மற்றும் கோக்ரஜாரில் அப்பாவி கிராம மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கோழைத்தனமானது. அனைவரது பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களுடன் இருக்கட்டும் என்று கூறினார்.
 
இது குறித்து அசாம் முதல்வர் தருண் கோகாய் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளேன். ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைவார்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான தாக்குதலை எந்தவிதத்திலும் யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. மத்திய அரசு அசாம் நிலையை கண்காணித்து வருகிறது.
 
சம்பவம் நடந்த பகுதிக்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்துவிட்டனர். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments