Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 5 நாட்கள் விடுமுறை: அசோக் லேலண்ட் அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (20:23 IST)
ஆட்டோமொபைல் துறைகளின் தொடர் சரிவு காரணமாக, மேலும் 5 நாட்களுக்கு வேலையில்லா நாட்களாக ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளதால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பண மதிப்பிழப்பு விவகாரம், ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி, மெட்ரோ ரயில்களின் பயன்பாடு, மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகை ஆகியவை காரணமாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது
 
இந்த நிலையில் ஏற்கனவே அசோக் லேலண்ட் உள்பட ஒருசில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வரும் நிலையில் தற்போது அசோக் லேலண்ட் மீண்டும் ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள வேலையில்லா நாட்களில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அசோக் லேலண்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளதால் ஊழியர்களின் சம்பளம் முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments