Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபு ஜாமீன் மனு 6 வது முறையாக தள்ளுபடி

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2015 (00:34 IST)
பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சாமியார் ஆசாராம் பாபு ஜாமீன் மனு 6 ஆவது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்யப்டபட்டது.
 

 
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் உள்ளது.
 
சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயன் சாய் ஆகிய இருவரும், கற்பழிப்பு, சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருந்தனர் என்று சூரத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் புகார் செய்து இருந்தனர். 
 
இதில், ஜோத்பூர் ஆசிரமத்தில் வைத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு  கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இதையடுத்து அவரது சார்பில் கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி 5 முறை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இவை அனைத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.
 
இந்நிலையில், ஜோத்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆசாராம் பாபு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கூடுதல் நீதிபதி மனோஜ் குமார் வியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, இது போன்ற குற்றச்சாட்டில் உள்ளவர்கள் ஜாமீன் பெற தகுதியற்றவர்கள் என  கூறி, அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.  ஆசாராம் பாபுவுக்காக பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி வாதாடினார் என்பது குறிப்பிடதக்கது.  
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?