பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க: எதிர்க்கட்சிகளுக்கு அருண்ஜெட்லி வேண்டுகோள்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (08:57 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை நேற்று முன் தினம் பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அதிரடியாக தீவிரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தாக்க முயற்சித்த பாகிஸ்தான் விமானங்களையும் இந்தியா துரத்தி அடித்தது. 
 
இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சிகள் கூடிய கூட்டம் ஒன்றின் முடிவில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் இந்தியப் ராணுவத்தை பிரதமர் மோடி அரசு அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் பத்திரிகைகள் தங்களுக்கு ஆதரவாக எழுத ஆரம்பித்தன.  பாகிஸ்தான் தரப்பில்தான் நியாயம் இருப்பதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக இந்தியா, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய அரசியல் தலைவர்களே கூறி வருவதாகவும் பல பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன
 
இந்த நிலையில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா ஒரே குரலில் பேச வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை பாகிஸ்தான் தனது தரப்பு நியாயமாக பயன்படுத்த அனுமதிக்கும் நிலையை உருவாக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments