Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்நிய செலாவணி சந்தையில் புதிய நம்பிக்கை - அருண் ஜெட்லி

அந்நிய செலாவணி சந்தையில் புதிய நம்பிக்கை - அருண் ஜெட்லி
, புதன், 9 ஜூலை 2014 (18:19 IST)
ஆண்டு சராசரி பணப் பரிமாற்ற விகிதம் அதிகரித்துள்ளது; ரூபாயின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அது அந்நிய செலாவணி சந்தையில் மற்ற துறைகளைப் போல் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 2014 ஜூலை 9 அன்று பொருளாதார ஆய்வு அறிக்கை 2013-14-ஐச் சமர்ப்பிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். 
 
2011-12 ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 47.92 இருந்தது. அது 2012-13ஆம் ஆண்டில் ரூ.54.41 ஆக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 2013-14 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 60.50 ஆக இருந்தது.
 
2013-14ஆம் ஆண்டில் எதிர்பார்த்த அளவு அந்நிய செலவாணி சந்தையில் கையிருப்பு இல்லை, அதுவே பெருமளவில் ரூபாய் மதிப்பின் சரிவிற்குக் காரணமாக இருந்தது. ஆனால், அண்மையில் ரூபாயின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அது அந்நிய செலாவணி சந்தையில் மற்ற துறைகளைப் போல் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil