Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (12:47 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
அந்த ஆய்வறிக்கையில், நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 2015-2016 ஆம் நிதியாண்டில் 1 சதவீதம் அளவுக்குக் குறைக்க முடியும் என்று கூறினார்.
 
2015-2016 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை அடைய வாய்ப்புள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
சுரங்கம் மற்றும் அலைக்கற்றை ஏலம் மூலம் மத்திய அரசின் வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
 
நாளை ( பிப்ரவரி 28) மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments